Wednesday 24 April 2013

இலங்கையின் தலைநகரில் குப்பை அள்ளும் அமெரிக்கத் தூதர்


கொழும்பில் காலிமுகத்திடல் கடற்கரையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட உலக பூமி தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க தூதரகம் ஈடுபட்டது.
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்,  தூதரகப் பணியாளர்களுடன் இணைந்து காலிமுகத்திடல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

No comments:

Post a Comment