Wednesday 24 April 2013

நீதிசேவை ஆணைக்குழுவினால் நீதவான்கள் இடமாற்றம்


நீதிசேவை ஆணைக்குழுவினால் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் பல பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றம் என்ற அடிப்படையில் எதிர்வரும் மே 2ம் திகதி முதல் இந்த இடமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சன் கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வான் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சம்மாந்துறை நீதவான் செல்வி ஏ.கனகரட்னம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கும் மட்டக்களப்பு மேதிக நீதவான் கே.கருணாகரன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கும் வாழைச்சேனை நீதவான் எம்.ஏ.றியாழ் மட்டக்களப்பு மேதிக நீதவானகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சனை அமைச்சர் றிசாட் பதியுதீன் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment