இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சமநிலை அற்றதாக இருப்பதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போர்ப்ஸ் சஞ்சிகைக்கு அவர் எழுதியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.
எனினும் மறுசீரமைப்பு விடயத்தில் ஏற்கனவே இலங்கை மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்க மறுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment