Wednesday 24 April 2013

பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு


மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது அரசாங்க தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது.
இதன் போது அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக மீது போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment