Wednesday 24 April 2013

ஈதலய மற்றும் கிந்த சிங்கள சஞ்சியின் ஆசிரியரின் வீட்டை காவற்றுறையினர் சோதனை


ஈதலய மற்றும் கிந்தர ஆகிய சிங்கள சஞ்சிகைகளின் பிரதான ஆசிரியர் சிரிலால் பிரியந்தவின் வீடு நேற்றைய தினம் காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காவற்துறையினர் தம்மை கைது செய்யவே வந்ததாகவும், எனினும் பின்னர் தம்மிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டு, வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன காவற்துறை தலைமையகத்தின் சில முக்கிய ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் சிரிலால் தெரிவித்துள்ளார்.
எனினும் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் காவற்துறையினரால் எதனையும் கைப்பற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment