அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நீர்கொழும்பு கிழக்கு கடற்பரப்பிலிருந்து 12 மைல் தூரத்தில் சட்டவிரோத படகு பயணிகளைக் கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
“மிதுனா புத்தா - 3” என்ற மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டோர் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment