Wednesday 24 April 2013

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் நீர்கொழும்பில் கைது


அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நீர்கொழும்பு கிழக்கு கடற்பரப்பிலிருந்து 12 மைல் தூரத்தில் சட்டவிரோத படகு பயணிகளைக் கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
“மிதுனா புத்தா - 3” என்ற மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டோர் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment