பிரிட்டன் தலைநகர் லண்டனின் மிட்கிராப் ரூயிசிலிப் பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(வயது 34) என்பவர் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இந்த மாதம் 12-ம் தேதி சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர்.
கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்து இருந்தது. லேப் டெக்னீசியான அவர் தனது குழந்தைகளுடன் விஷமருந்து குடித்து இறந்தாரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் ஸ்காட்லாண்டு பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இருந்தும், இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படமால் இருந்தது. இந்நிலையில், நடைபெற்று வந்த சோதனை குறித்து ஸ்காட்லாண்டு யார்டு பொலிசார் பேசினர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, சில விஷமருந்துகள் கலந்திருக்க சந்தேகிக்கப்படும் மூன்று டம்ளர்களை பரிசோதித்து வருகிறோம்.
மேலும் இறப்பதற்கு முன் தனது கணவருக்கு எழுதிய கடிதம் கண்டுபிடித்துள்ளோம். மேலும் பிரேத பரிசோதனைகள் குறித்த முழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். |
No comments:
Post a Comment