Wednesday 24 April 2013

மட்டக்களப்பிலும் காணிகள் சுவீகரிக்க இராணுவத்தினர் திட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவம் மற்றும் கடற் படை ஆகியவற்றின் தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான 12 இடங்களில் காணிகளை சுவீகரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு மற்றும் காணி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள்ää இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும்  தெரியவருகிறது.

வாகரைää கிரான்ää வாழைச்சேனைää செங்கலடி மற்றம் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள இடங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment