Wednesday 24 April 2013

மின்சாரக் கட்டண உயர்வு அரசாங்கத்திற்கு எதிரான சதியா?


மின்சாரக் கட்டண உயர்வானது அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டமா என்பதனை ஆராயுமாறு முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
விசேட கடிதமொன்றின் மூலம் அவர் இதனைக் கோரியுள்ளார்.
வீட்டு பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தை 35 வீதத்தினால் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கம் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
நிதி அமைச்சின் செயலாளர் மின்சாரக் கட்டண உயர்வு குறித்த யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் நான் எந்தவிதமான யோசனைத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment