Wednesday 24 April 2013

மாணவி பலாத்காரம்: பள்ளிவாசலில் சத்தியம் செய்வேன் நான் குற்றவாளி இல்லை! - காத்தான்குடி நகரசபை உறுப்பினர்


நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என்று ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் தெரிவித்தார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் கடந்த திங்கட்கிழமையன்று மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் மட்டக்களப்பு-காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்.

அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை. எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன். 

அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்.

என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல வருடங்களாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா? என்றும் நான் கேட்க விரும்புகின்றேன்.

இதேவேளை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் மாணவி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment